பெரம்பலூர்: விவசாயி தூக்கு போட்டு தற்கொலை

2575பார்த்தது
பெரம்பலூர்: விவசாயி தூக்கு போட்டு தற்கொலை
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் என்ற ராமசாமி (வயது 60). விவசாயியான இவர் குடும்ப பிரச்சினை காரணமாக சம்ப வத்தன்று தனது விவசாய நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு கொண்டார். அதனை பார்த்த அவரது மகன் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமசாமி, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் நேற்று பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி