கள்ளக்காதலை கணவன் கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

70036பார்த்தது
கள்ளக்காதலை கணவன் கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
திருச்சி பாலக்கரை கூனிக் பஜார் மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வெண்ணிலா (35). இவர்களுக்கு 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். கார்த்திக் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். வெண்ணிலா திருச்சி மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவுக்கு அந்த நபருடன் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதை அவரது கணவர் கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த வெண்ணிலா வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி