பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு - சென்னையில் என்ஐஏ சோதனை

82பார்த்தது
பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு - சென்னையில் என்ஐஏ சோதனை
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கர்நாடகாவில் 5 இடங்களிலும் சோதனை நடக்கிறது. சென்னை மண்ணடியில் அப்துல்லா என்பவரது வீட்டில் தற்போது அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் சென்னையில் தங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில், என்ஐஏ சோதனை நடக்கிறது.

கடந்த மார்ச் 1ஆம் தேதி பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அதில் 10 பேர் காயமடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தொடர்புடைய செய்தி