தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கக் கூட்டம்

71பார்த்தது
தேர்தல் நாளுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பில் இருந்து என்னென்ன நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அனைத்து ஒருங்கிணைப்பு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது,
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தபோது, பாராளுமன்றப் பொதுத்தேர்தல் ஏப்-19ம் தேதி அன்று நடைபெறவுள்ளது.
தேர்தல் நாளுக்கு 72 மணிநேரம் முன்னதாக, ஒவ்வொரு வேட்பாளருக்கும் வேட்பாளர் பயன்பாட்டுக்கு ஒரு வாகனமும், முதன்மை முகவர் பயன்பாட்டிற்கும் ஒரு வாகனமும், வேட்பாளரது பணியாளர் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு வாகனம் வீதம் மொத்தம் எட்டு வாகணத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் அனுமதி கோரும்பட்சத்தில் அக்கட்சியினை சேர்ந்த மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் தேர்தல் பணிகளை கவனித்திட ஏதுவாக ஒரு வாகனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.
வாக்குப்பதிவு முடியும் வரை இனம், மதம், மற்றும் மொழி சார்ந்த தூண்டல்களில் வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது.
மேலும் தேர்தல் நாளுக்கு 48 மணிநேரம் முன்னதாக, அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரங்கள் செய்வதை நிறுத்திட வேண்டும். பாராளுமன்றப் பொதுத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைவரும் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி