வாக்கு சாவடி அலுவலர்களுக்கு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு

69பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம்
வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான இணையவழி கணினி முறை குலுக்கல், தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம், மற்றும் தேர்தல் பொதுபார்வையாளர் ராஜேந்திகுமார் வர்மா, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட இணையவழியிலான கணினிமுறை குலுக்கல் மற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்கள் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ளார்கள் என்பதற்கான இரண்டாம் கட்ட இணையவழியிலான கணினிமுறை குலுக்கல் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம், மற்றும் தேர்தல் பொதுபார்வையாளர் ராஜேந்திகுமார் வர்மா, ஆகியோர் முன்னிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் நடைபெற்றது.
.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, சார் ஆட்சியர் கோகுல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வைத்தியநாதன், விஜயா, தேர்தல் பிரிவு வட்டாட்சியர்கள் சிவா, அருளானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி