நேற்று 1.48 லட்சம் பேர் பேருந்தில் பயணம்

52பார்த்தது
நேற்று 1.48 லட்சம் பேர் பேருந்தில் பயணம்
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 19) நடைபெறவுள்ள நிலையில் சென்னையில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். தேர்தலுக்காக தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகள், 807 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் நேற்று (ஏப்ரல் 17) 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 800 பேர் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர். அதேபோன்று, இன்று (ஏப்ரல் 18) சென்னையில் இருந்து பயணம் செய்ய 46ஆயிரத்து 503 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி