குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

57பார்த்தது
குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
தென்காசி: குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டதையடுத்து, 3 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் பெய்த தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து கடந்த திங்கள்கிழமை முதல் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. அருவிகளில் தண்ணீர் வரத்து குறையாததால் 3 நாள்களாக தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் தண்ணீர் வரத்து சற்று குறைந்ததையடுத்து பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி