மதுரையில் தவெக மாநாடு கன்பார்ம்.. கசிந்தது ரகசியம்

70பார்த்தது
சென்னையில் இன்று (ஜூன் 28) 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார். இந்த விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு சுவையான சாப்பாடுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவை அணைத்தையும் சமைத்த சுரேஷ் என்பவர் கூறுகையில், “இந்த விழாவில் 3500 பேருக்கு சமைக்க கூறியுள்ளனர். இந்த விழாவைத் தொடர்ந்து வருகிற 3ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவுக்கும் நாங்கள் தான் சமைக்கிறோம்” என்றார்.

அத்துடன், “மதுரையில் நடக்க இருக்கும் மாநாட்டிற்கும் நாங்கள் தான் சமைப்போம் என நினைக்கிறோம்” என கூறியுள்ளார். இதன் மூலம், கட்சியின் முதல் மாநாடு மதுரையில் நடைபெற இருப்பது உறுதியாகியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி