மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவன்

31534பார்த்தது
மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவன்
உத்தரப் பிரதேசத்தில் நகர்புறப் பகுதியில் நடந்த சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு காவல்துறையில் கான்ஸ்டபுளாக பணியாற்றிவரும் மாயங்க் என்பவரின் மனைவி தூக்கு பூட்டு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த செய்தி தெரிந்த உடனேயே சில மணி நேரங்களில் மாயங்க்கும் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக இந்த தற்கொலைகள் நிகழ்துள்ளதாக காவத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி