ஆக்கிரமிப்பு.. சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

71பார்த்தது
ஆக்கிரமிப்பு.. சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தருமத்துப்பட்டியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சுமார் 2,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற பெண் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு மயானத்துக்கு கொண்டு சென்றபோது, பாதையை ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறப்படும் நபர், வழிவிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், உடலை அங்கேயே வைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி