கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை - ரகுபதி

82பார்த்தது
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை - ரகுபதி
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை, அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும், எத்தனை பெரிய பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். விஷச்சாரயத்தை ஒழிக்கும் முனைப்பில் திமுக அரசு உள்ளது. நிச்சயமாக இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி