போலீசுக்கு மாமூல் கொடுத்துடுவேன்! பரபரப்பு வாக்குமூலம்

69பார்த்தது
போலீசுக்கு மாமூல் கொடுத்துடுவேன்! பரபரப்பு வாக்குமூலம்
கள்ளக்குறிச்சி கள்ளாச்சாராய மரண எண்ணிக்கை 55-ஐ தொட்டுள்ளது. மெத்தனால் விஷச்சாராயத்தை விற்பனை செய்த கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜை, போலீசார் கைது செய்த நிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். “எத்தனையோ முறை போலீஸ் பிடித்துள்ளனர், பெரிய அளவில் சிக்கல்கள் எதுவும் இல்லாததால், கொஞ்ச நாளில் ஜெயிலில் இருந்து வெளியே வந்து விடுவேன்.

பின், அதே தொழிலை தொடர்வேன். எனக்கு எல்லா அரசியல் கட்சிகளிலும் ஆட்கள் உள்ளனர். போலீசுக்கும் வழக்கமான மாமூல் கொடுத்து விடுவேன். தண்ணீர் கலக்கப்பட்ட சரக்கு வேண்டாம் என பலரும் சொன்னதால், அதிக அளவில் தண்ணீர் கலக்காமல் வாங்கி வந்த சரக்குகளை விற்றுத் தீர்த்தேன். இந்த முறை சரக்கு இவ்வளவு வீரியம் பெற்று பலரின் உயிரை பறிக்கும் என எனக்கு தெரியாது.” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி