டவர் இருந்தும் செல்போன் சிக்னல் இல்லை

72பார்த்தது
டவர் இருந்தும் செல்போன் சிக்னல் இல்லை
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ள நிலையில் பல ஊர்களில் செல்போன் சிக்னல் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தக்கட்டியைச் சேர்ந்த வெற்றி கூறும் போது, கிராமத்தில் பிஎஸ்என்எல் டவர் இருந்தாலும் சிக்னல் கிடைப்பதில்லை. ஆம்புலன்ஸை தொடர்பு கொள்வது, ஆன்லைனில் கல்வி கற்பது, வெளியூரில் இருக்கும் குழந்தைகளுடன் பேசுவது போன்றவற்றை மேற்கொள்ள முடியவில்லை, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி