மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

60பார்த்தது
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆனது. இல்லத்தரசிகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் காங்கிரஸ் கட்சியின் மகாலட்சுமி திட்டம் தொடர்பாக, வாக்காளர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறயதாக வழக்கு தொடரப்பட்டது.

டோக்கன் விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், தேர்தல் ஆணையம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்வழக்கு விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்துள்ளதாக கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி