பாஜகவுடன் மக்களவைத் தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் நேரம் தரவில்லை என பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தேமுதிக பாஜகவோடு கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என செய்திகள் வெளியான நிலையில் பிரேமலதா இவ்வாறு தெரிவித்துள்ளார்.