குரூப் ஒன் தேர்வு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

74பார்த்தது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படுகின்ற
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி குரூப்- 1 தேர்வானது நீலகிரி
மாவட்டத்தில் உதகை பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளி, ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும்
புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 3 மையங்களில் 988 தேர்வர்கள் தேர்வு எழுது விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று நடைபெற்ற தேர்வில் 570
நபர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல்,
தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு தேர்வுகள் சரியான நேரத்தில் துவங்கப்பட்டது. மேலும், அனைத்துத் தேர்வு மையங்களிலும் தேர்வு
நடைபெறுவதை கண்காணிப்பு கேமரா மூலம் வீடியோ பதிவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிடவும்,
தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி