பந்தலூர் அருகே சேரம்பாடி காவல்நிலையம் அருகில் சாலையோரத்தில் ஏராளமான மரங்கள் உள்ள. தற்போது இந்த மரங்கள் வயது முதிர்வால்பட்டுபோய் ஆபத்தான நிலையில் உள்ளது. வலு விழுந்து காணப்படும் மரம் கனமழை, காற்று அடித் தால் மரம் விழுந்து ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. பருவமழை துவங்கும் முன் ஆபத்தான மரத்தை அகற்றுவதற்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.