புதுமண தம்பதிகள் சுட்டுக்கொலை (வீடியோ)

53பார்த்தது
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹன்சி பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேஜ்வீர் மற்றும் மீனா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை 9:30 மணியளவில் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருமணத்திற்கு இவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஆணவக்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி