பள்ளி மாணவிகளுக்கான 'அகல் விளக்கு திட்டம்'

79பார்த்தது
பள்ளி மாணவிகளுக்கான 'அகல் விளக்கு திட்டம்'
9 -12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய ரூ.50 லட்சம் மதிப்பில் 'அகல் விளக்கு திட்டம்' செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். உடல், மன, சமூக ரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், இணையதள பயன்பாடுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்கவும் ஆசிரியைகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.