புதுமணப்பெண் தற்கொலை.. காப்பாற்ற சென்ற கணவனும் பலி!

2259பார்த்தது
புதுமணப்பெண் தற்கொலை.. காப்பாற்ற சென்ற கணவனும் பலி!
குடும்ப தகராறு காரணமாக புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற சென்ற கணவனும் பரிதாபமாக உயிரிழந்தார். சேலத்தை சேர்ந்தவர் அருள் முருகன். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அபிராமி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அபிராமி வீட்டின் அருகே உள்ள 100 அடி விவசாய கிணற்றில் குதித்துள்ளார். அப்போது அவரை காப்பாற்ற அருள் முருகனும் கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி