குடும்ப தகராறு காரணமாக புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற சென்ற கணவனும் பரிதாபமாக உயிரிழந்தார். சேலத்தை சேர்ந்தவர் அருள் முருகன். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அபிராமி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அபிராமி வீட்டின் அருகே உள்ள 100 அடி விவசாய கிணற்றில் குதித்துள்ளார். அப்போது அவரை காப்பாற்ற அருள் முருகனும் கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.