நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், இளநிலை நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பிகாரில் 17 மாணவர்களுக்கு தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளது. குஜராத் கோத்ரா மையத்தில் தேர்வு எழுதிய 30 பேரும் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டு தேசிய தேர்வு முகமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக இளநிலை நீட் தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டதாக 63 மாணவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.