"நீட் கருணை மதிப்பெண் ஒரு மோசடி"

59பார்த்தது
"நீட் கருணை மதிப்பெண் ஒரு மோசடி"
நீட் கருணை மதிப்பெண் ஒரு மோசடி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் தேர்வில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருப்பதும், 718, 719 மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் சாத்தியமில்லாத ஒன்று. இத்தேர்வில் குழப்பமும், குளறுபடியும் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது. நேரப் பற்றாக்குறையால் நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி