பூமியை தாக்குவதற்கு விண்கல் ஒன்று தயாராகி வருவதாக நாசா நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 54 மீட்டர் விட்டம் கொண்ட இந்த கல்லானது பூமியை தாக்குவதற்கு 3.1% வாய்ப்பு உள்ளது. இந்த கல் பூமியை தாக்கினால் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். டிசம்பர் 22, 2032-ம் ஆண்டு இந்த கல் பூமியை தாக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கல்லின் நகர்வை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.