அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்

52083பார்த்தது
அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்
தமிழகத்தில் உள்ள சுமார் 31 ஆயிரம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப் படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன்பெற உள்ளனர். இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை நடைமுறை படுத்த உரிய வசதிகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி