நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அழகு முத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை பௌர்ணமி திருநாளில் தங்க கவசம் சிறப்பு அலங்காரத்தில் ஐந்து ரோடு அழகு முத்து மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.