திருச்செங்கோடு நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

75பார்த்தது
திருச்செங்கோடு நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து
திருச்செங்கோடு நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தீயை அணைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ச. உமா திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட கோழிக்கால் நத்தம் சாலையில் செங்கோடம்பாளையம் வாா்டு எண் 5-இல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண் உரமாக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்தக் கிடங்கில் எதிா்பாராத விதமாக திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. அன்று காலை முதல் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியா் ச. உமா பாா்வையிட்டாா்.

குப்பைக் கிடங்குக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு உடல் நலனில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மருத்துவா்கள் குழு பரிசோதனை செய்தனா். மூச்சுத் திணறல் உள்ளவா்களுக்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி