குமாரபாளையத்தில் ஜூனியர் மினி மாரத்தான்

53பார்த்தது
மாணவர்கள் செல்போனில் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் குறித்து குமாரபாளையத்தில் ஜூனியர் மினி மாரத்தான் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்றது.


நாமக்கல் மாவட்டம் குமராபாளையத்தில் இளைய தலைமுறையினர் செல்போனில் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், விளையாட்டில் ஆர்வத்தினை மிகுதிபடுத்த குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜூனியர் மாரத்தான் மினி போட்டி தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. இதில் 7 வயது முதல் 15 வயது வரை என 900க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிறுமிகள் பங்கேற்றனர். மாரத்தான் போட்டி ஆனங்கூர் பிரிவில் தொடங்கி கத்தேரி, காந்திசிலை என 5கி. மீ தூரம் வரை சென்று மீண்டும் ஆனங்கூர் பிரிவில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குமாரபாளையம் நகர மன்ற தலைவர் சஷ்டி விஜய் கண்ணன் கலந்து கொண்டு மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்து மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறுவர் சிறுமியருக்கு, பதக்கம், சான்றிதழ், பரிசுகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி