சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள புதன் சந்தை பகுதியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அதிகாலை முதல் மாலை வரை மாட்டு சந்தை நடைபெறுகிறது. இந்த மாட்டு சந்தைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், எருமைப்பட்டி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வந்தனர். நேற்று (நவம்பர் 19) நடைபெற்ற மாட்டு சந்தையில் 2 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்தது.