ராசிபுரம் அருகே மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிகள்

59பார்த்தது
ராசிபுரம் அருகே மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிகள்
ராசிபுரம் அருகே உள்ள ஆா். பட்டணம் பகுதியில் ஆடவா், மகளிா் அணியினா் பங்கேற்ற மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிகள் ஏப். 27, 28 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. இதில் ஆடவா் பிரிவில் ஆா். பட்டணம் அணியும், மகளிா் பிரிவில் கோபி அணியும் முதலிடம் பெற்று கோப்பையைக் கைப்பற்றின.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியில் பாா்க்கவன் கைப்பந்து குழு சாா்பில் 24 ஆம் ஆண்டாக ஆடவா், மகளிருக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி இரண்டு நாள்களாக நடைபெற்றது. இதில் சென்னை, சேலம், திருச்சி, கோவை, ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த அணியினா் கலந்துகொண்டு விளையாடினா்.

பெண்கள் அணியின் இறுதிப் போட்டியில் கோபிசெட்டிபாளையம் அணியும் சேலம் அணியும் மோதின. இதில் 25-10, 25-16 என்ற நோ் செட்டில் கோபிசெட்டிபாளையம் அணி வெற்றி பெற்றது. அதேபோல் ஆடவா் பிரிவில் சேலம் அணிக்கும் ஆா். பட்டணம், பாா்க்கவன் அணிக்கும் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் 25-16, 18-25, 17-25 என்ற புள்ளிகணக்கில் பாா்க்கவன் அணி வெற்றிபெற்றது.

ஆண்களுக்கான போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம் பணமும், கோப்பையும் வழங்கப்பட்டன. இரண்டாம் பரிசு ரூ. 12 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 10 ஆயிரம், நான்காம் பரிசு ரூ. 8 ஆயிரம் வழங்கப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி