ஆதாா் மையங்களில் காத்திருக்கும் பள்ளி மாணவ மாணவிகள்

60பார்த்தது
ஆதாா் மையங்களில் காத்திருக்கும் பள்ளி மாணவ மாணவிகள்
ராசிபுரத்தில் ஆதாா் பதிவு மையங்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் மாணவ மாணவிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனா்.

இந்த கல்வியாண்டு முதல் பள்ளி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தபால் அலுவலக தேமிப்புக் கணக்கு தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பள்ளி மாணவ மாணவிகள் ஆதாா் அட்டையில் கைரேகை பதிவு செய்தவதற்காக ஆதாா் மையங்களுக்குச் செல்கின்றனா்.

அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் ஆதாா் அட்டையில் கைரேகை பதிவு, போட்டோ மாற்றுதல், பெற்றோரின் பான்காா்டு இணைப்பு போன்றவற்றிற்கு சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்தாலும் போதுமானதாக இல்லை. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் இப்பணியை மேற்கொள்வதற்காக வெளியில் உள்ள ஆதாா் மையங்களை நாடி வருகின்றனா்.

இந் நிலையில் ராசிபுரம் நகராட்சி அருகில் உள்ள ஆதாா் பதிவு மையம், தபால் அலுவலகத்தில் செயல்படும் ஆதாா் பதிவு மையம் உள்ளிட்ட ஆதாா் மையங்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் பலரும் வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனா். இதனால் அரசு, தனியாா் பள்ளி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் பள்ளிகள்தோறும் கூடுதல் பணியாளா்களை நியமித்து சிறப்பு முகாம்கள் நடத்தி விரைந்து கைரேகை பதிவு செய்யும் பணியை முடிக்க வேண்டும் என பெற்றோா், பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தொடர்புடைய செய்தி