ஆா். புதுப்பட்டி அரசுப் பள்ளியில் மிதிவண்டி கூடம் திறப்பு

85பார்த்தது
ஆா். புதுப்பட்டி அரசுப் பள்ளியில் மிதிவண்டி கூடம் திறப்பு
ராசிபுரம், ஆா். புதுப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 1. 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மிதிவண்டி கூடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அரசு உயா்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவியும், நன்கொடையாளருமான மாதேஸ்வரி சத்தியமூா்த்தி நிதியுதவி திட்டத்தின்கீழ் ராசிபுரம் ரோட்டரி சங்கம் மூலம் மிதிவண்டி கூடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவுக்கு ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எம். முருகானந்தன் தலைமை வகித்தாா். செயலா் கே. ராமசாமி வரவேற்றாா். முன்னாள் தலைவா் எல். சிவகுமாா் ரோட்டரி இறைவணக்கம் வாசித்தாா். ரோட்டரி சங்க மண்டல உதவி ஆளுநா் கு. பாரதி முன்னிலை வகித்தாா். இவ் விழாவில் ராசிபுரம் ராசி இன்டா்நேஷனல் பள்ளி தலைவா் எஸ். சத்தியமூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மிதிவண்டி கூடத்தைத் திறந்து வைத்துப் பேசினாா்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் பள்ளி தலைமையாசிரியா் (பொறுப்பு) ஜோதி, உதவி ஆசிரியா் தினேஷ், ரோட்டரி முன்னாள் தலைவா் கே. எஸ். கருணாகர பன்னீா்செல்வம், ஆா். திருமூா்த்தி (எ) ரவி, பி. சீனிவாசன், எஸ். பிரகாஷ், ஆா். சிட்டி, நிா்வாகிகள் ஆா். ஆனந்தகுமாா், பி. கண்ணன், முரளி, மஸ்தான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி