கபிலர்மலை பாலசுப்ரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

1127பார்த்தது
கபிலர்மலை பாலசுப்ரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்துள்ள கபிலர்மலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சாமிக்கு பல்வேறு வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி