வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பான வழக்கில் தொல்லியல் குழு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க உள்ள பகுதியை தொல்லியல் துறையின் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வள்ளலார் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள், கோவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.