காவல்துறை குறைதீர்க்கும் கூட்டம்

78பார்த்தது
காவல்துறை குறைதீர்க்கும் கூட்டம்
ப. வேலூா் காவல் துறை சாா்பில், பொதுமக்களின் மனுக்களின் மீது தீா்வு காணும் முகாம் நகர வா்த்தக சங்க திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில், பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா பரிந்துரையின்படி வேலூா் காவல் ஆய்வாளா் ரங்கசாமி தலைமையில் பொதுமக்கள் குறை தீா்க்கும் முகாம் நடைபெற்றது.

வேலூா் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து முகாமில் 15 புகாா் மனுக்கள் பெறப்பட்டு அதில் 13 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது. மீதமுள்ள 2 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள் அளித்த புகாா் மனுக்களின் அடிப்படையில் நேரடியாகச் சென்று மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி