காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

1889பார்த்தது
குமாரபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் காவிரி ஆற்றின் பழைய காவேரி பாலம் அடியில், அடையாளம் தெரியாத, 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக நேற்று முன்தினம் காலை 07: 00 மணியளவில் பொதுமக்கள் போலீசில் தகவல் கூறினர். இது குறித்து வி. ஏ. ஒ. முருகன் கொடுத்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.  மேலும் அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இறந்தவர் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்துள்ளார். உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால், இவர் இறந்து பல நாட்கள் ஆகியிருக்கும் என தெரியவருகிறது. தற்கொலையா? அல்லது கொலை செய்து வீசப்பட்டாரா? யார்?  எந்த ஊர்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி