அரசு அனுமதியில்லாமல் மது விற்ற மூவர் கைது

66பார்த்தது
குமாரபாளையம் அருகே அரசு அனுமதியில்லாமல் மது விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.

 

குமாரபாளையம் அருகே அரசு அனுமதியில்லாமல் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் ரோந்து பணி மேற்கொண்டனர். காந்திபுரம், அருவங்காடு, பவர் ஹவுஸ் பின்புறம் ஆகிய இடங்களில் அதிக விலைக்கு மது விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த முருகன், 42, வெங்கடேஷ், 23, ஆறுமுகம், 60 மூவர் கைது செய்யப்பட்டு, இவர்களிடமிருந்து 209 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.   இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி