குமாரபாளையத்தில் தனியார் கல்லூரி மாணவி மாயாமானார்.
குமாரபாளையம் வட்டமலை பகுதியில் வசிப்பவர் காந்தரூபன், 41. கரும்பு வெட்டும் கூலி. இவரது 19 வயது மகள், அங்குள்ள தனியார் கல்லூரியில் பி. எஸ். சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஏப். 16ல் காணாமல் போனார். இது குறித்து இவரது தந்தை குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் தேடி வருகின்றனர்.