வெறிச்சோடி காணப்படும்  தேர்தல் பணிமனைகள்

67பார்த்தது
குமாரபாளையத்தில் தேர்தல் பணிமனைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

 

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அனைத்து அரசியல் கட்சியினர் பரபரப்பாக பிரச்சாரம், தேர்தல் பணிமனை திறப்பு, உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட துவங்கினர். அ. தி. மு. க. சார்பில் ஒரு தேர்தல் பணிமனை, தி. மு. க. சார்பில் வடக்கு, தெற்கு என இரண்டு தேர்தல் பணிமனை, பா. ஜ. க. சார்பில் ஒரு பணிமனை  திறக்கப்பட்டது.  கூட்டணி நிர்வாகிகள் வருகை,  வார்டு நிர்வாகிகள் வருகை, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட நிர்வாகிகள் வருகை, நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சார கூட்டம் ஏற்பாடு செய்ததுடன், நிர்வாகிகள் தொண்டர்களுடன் தேர்தல் பணிமனையில் இருந்து புறப்பட்டு செல்லுதல், தினமும் தேர்தல் பணிமனையில் ஒன்று கூடி, வார்டு வாரியாக பிரச்சாரம் செய்ய குழுக்களாக பிரிந்து செல்லுதல், அவரவர் சேர்ந்த கட்சி வெற்றி பெற அயராது பாடுபட உழைத்த இடம் தேர்தல் பணிமனை. தற்போது தேர்தல் முடிந்த நிலையில், அனைத்து கட்சி தேர்தல் பணிமனைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை நாளன்று மீண்டும் இந்த அலுவலகங்கள் பரபரப்பாகும்.

தொடர்புடைய செய்தி