சீதளா தேவி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

57பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சீதளா தேவி மாரியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரத்துடன் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மேலும் 108 பெண்கள் 108 திருவிளக்கு வைத்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இதில் உலக நன்மைக்காகவும், தாலி பாக்கியம் நிலைக்கவும் வேண்டி ஏராளமான பெண்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி