மயிலாடுதுறை எஸ். பி. அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மனு விசாரணை நாளில் 10 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் காவலா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 3 புகாா் மனுக்கள் மீது நேரடி விசாரணை மேற்கொண்டு, அம்மனுக்களின் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட டிஎஸ்பிக்களுக்கு அறிவுறுத்தினாா்.
போலீஸாரிடமிருந்து பெறப்பட்ட 7 மனுக்கள் மீது உடனடித் தீா்வு காணப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் தினமும் காலை 11 மணி முதல் 12 மணி வரை பொதுமக்கள் தங்கள் குறைகள் தொடா்பான மனுக்களை அளிக்கலாம்.