திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தலைமை குருக்களை இணை ஆணையர் ஜோதி ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசியதாக கூறி சிவாச்சாரியார்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அறங்காவலர் குழுவினர் மற்றும் போலீசார் சிவாச்சாரியார்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.