பீகார்: ஜமுய் கிராமத்தை சேர்ந்த இந்திரகுமாரி என்ற பெண் குடிகார கணவரின் துன்புறுத்தலால் வாழ்வை வெறுத்த நிலையில் வங்கி ஊழியர் பவன் என்பவரின் ஆறுதல் கிடைத்தது. இது காதலாக மாற இந்திரகுமாரி வீட்டை விட்டு ஓடிப்போய் காதலரை கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனிடையில் ஊர் மக்களின் ஆதரவும், எதிர்ப்பும் சமமாக அவருக்கு கிடைத்து வருகிறது.