சீர்காழியில் போக்குவரத்து காவலர்களின் அதிரடி நடவடிக்கை

68பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் போலீசார் உப்பனாற்றங்கரையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடையை மீறி பள்ளி நேரத்தில் மணல் ஏற்றி சென்ற ஐந்து லாரிகளை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். மேலும் லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி