மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம்

74பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட அளவிலான தடகளப்போட்டி தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரியில் உள்ள அரசு சிறு விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமைh தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் உமாநாத் முன்னிலை வகித்தாா். சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநா் பிரபாகா் வரவேற்றாா். பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தடகளப் போட்டிகளை தொடக்கிவைத்தாா். இதில் மயிலாடுதுறை, குத்தாலம், சீா்காழி, தரங்கம்பாடி ஆகிய வட்டங்களில் குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற 230 பள்ளிகளை சோ்ந்த 680 மாணவா்கள் பங்கேற்றனா்.

இதில் ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் என மொத்தம் 86 போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவா். தொடா்ந்து போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை எம்எல்ஏ வழங்கினாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி