மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மேம்பால கட்டுமான பணிக்காக முதல் நடைமேடை அருகில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.
அந்த பகுதியில் நூறு அடி நீளத்திற்கு பயணிகள் அமரும் சிமெண்ட் இருக்கைகள் திடீரென மண்ணில் புதைந்தது. இந்த சம்பவமானது அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அந்தோதயா ரயில், நடைமேடையை கடந்து சென்ற பின் ஏற்பட்ட விபத்து என்பதால் பயணிகள் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.