மயிலாடுதுறை காவல் நிலையம் சாலையின் அருகே கழிவுநீர் வெளியேற குளம் போன்ற தேங்கி இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த கழிவு நிழல் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் வரக்கூடும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.