தங்க பதக்கம் வென்ற மயிலாடுதுறை வீராங்கனை

71பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி இளங்கோவன் என்பவரது மகள் பரணிகா. இவர் திருச்சியில் நடைபெற்ற போல்ட் வால்ட் போட்டியில் பங்கேற்று நேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தொடர்ந்து நான்கு மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்து வெற்றி பெற்று அசத்தியுள்ளார். வெற்றி பெற்ற வீராங்கனை பரணிக்காவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை வெற்றியை அனைவரும் பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி