‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' முகாம்

66பார்த்தது
தரங்கம்பாடியில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ புதன்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீா்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்டமானது தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களால் தரங்கம்பாடி வட்ட அளவில் பிப். 19 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பிப். 20 (வியாழக்கிழமை) காலை 9 மணி வரையிலும் தரங்கம்பாடி வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்ய உள்ளதால் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலா்களிடம் தெரிவித்து தமிழ்நாடு அரசின் இந்த மகத்தான திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி