மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட குத்தாலம் பேரூராட்சி புதுநகரின் வசித்து வருபவர் கோ. கலைவேந்தன். 85 வயதான தமிழ் ஆசிரியரான இவர் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட பல நூல்களை இயக்கி எழுதியுள்ளார். இந்த நிலையில் இன்று அவரது இல்லத்திற்கு சென்ற இளைஞர்கள் மூன்று பேர் அவரை தாக்கி செல்போன் பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.