2 பெண்களை கொன்ற கொடூரனுக்கு ஆயுள் தண்டனை

63பார்த்தது
2 பெண்களை கொன்ற கொடூரனுக்கு ஆயுள் தண்டனை
தேனி மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் கடந்த 2014-ல் சுருளிமல்லம்மாள் (85) என்ற மூதாட்டியை கொன்று அவரின் 3 சவரன் நகையை திருடினார். அதே ஆண்டு தங்கம்மாள் (77) என்பவரையும் கொலை செய்து கவரிங் நகைகளைக் கொள்ளையடித்தார். கொலையாளியை போலீசார் கைது செய்த நிலையில் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை, ரூ. 1000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். திருட்டு குற்றத்திற்காக பத்தாண்டுகள் சிறை, ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி